காதல் கள் தான்
சடுதியில்
மயக்கத்தில் ஆழ்த்தியது
சிந்திக்க விடாமல்
மனதை அழுத்தியது
பெருந்துயர் வந்து
ஆட்கொண்டு
பேசாதே போவாயோவென
பயமுறுத்தியது
இத்தனை
பயமுறுத்தல்களும்
உன்னிடத்தில் இருந்து வந்த
அந்த
Hi - யில் முடிவடைந்தது...
பயத்தை புறந்தள்ளி
மீண்டும் காதலிக்கத் துவங்கிவிட்டேன்
காதலின் வலி உணர்ந்தவன்
இன்னொருத்தியை வலிக்கச் செய்வாயா?
என்ன!
ஒருவேளை
உன் காதல் என் மீது
அபிஷேகிக்கப்படாமல்
போனாலும் கூட
நான் காதலிக்கிறேன்
உன்னை...
என்னுள் இது எத்தனையாவது என்று
தெரியவில்லை...
முன்பெப்போதும்
நெஞ்சுக்கூடு
சிதறிப்போவதான உணர்வு
ஏற்பட்டதே இல்லை..
வலி
நிராகரிப்பு
பிரிதல்
ப்ளாக் செய்தல்
எல்லாம் வழமை தான்...
இன்றுணர்ந்த வலி
புதிதாகவே
பூத்த மலர் இன்று....