அன்புள்ள உனக்கு...
நான் உன்னை காதலிக்கிறேன். இதை உன்னிடத்தில் சொல்ல வெட்கப்படுகிறேன். ஒவ்வொரு முறை நிராகரிப்பிலும்... அய்யோ இது காதலில்லையே என உணர்ந்து அழுதிருக்கிறேன். இன்னும் கவனமாக இருக்க வேண்டும் என்று எனக்குள் சுருங்கியிருக்கிறேன்.
இன்று
காதலை சந்தித்துவிட்டேனே என்று அழுது நின்றேன். ஒரு சிறுமி என்னை கேலி செய்யும் அளவிற்கு. நான் அழுதிருக்கிறேன்.
என்ன செய்ய!
நான் வாங்கி வந்த வரம் அப்படி... இதை உன்னிடம் சொல்ல முடியாது. ஒரு வேளை நான் சொல்லி நீ ஏற்காதே போகும் இன்னொரு வலியை தாங்க எனக்கு திறன் இல்லை.
என்றும் உன் நினைவாக...
உன்னவள்
No comments:
Post a Comment