Friday, 12 April 2024

எப்போது வருவாய் நீ

 



மெல்ல மெல்ல

உணர்வுகளுக்குள் உட்புகுந்து

தேடுகிறேன்

உன்னை


காற்றும்

நீரும்

நெருப்பும்

ஆகாயம்

திருடியதா உன்னை


எனக்கே எனக்கான நீ

எங்கிருக்கிறாய்

விழிகளில் வழியும்

நீருக்குள்

உட்புகுந்து

கவலைகளை மறக்கடிக்க

எப்போது வருவாய்


கவிதைகள் அல்லாத

கவிதைகளுக்குள்

உட்புகுந்து

என் உணர்வுகள்

தரும் தகிப்பை உணர்வாயா?


வா சீக்கிரமாக

ஒரு நரை முடி

நான் கிழப்பருவம் 

ஏய்துவதாக 

கட்டியம் கூறுகிறது

இன்னமும் உன் மீதான 

ஆசை 

நரைத்தபாடில்லை...

No comments:

Post a Comment

எழுதுகிறேன் ஒரு கடிதம்.

  கடிதப் போட்டியில் இரண்டாம் பரிசு பெற்றதென செல்லம் கொஞ்ச முடியவில்லை இந்த கடிதத்திடம்.. ஏன் என்று பிறகு சொல்கிறேன்... --------------------...