Wednesday, 10 April 2024

கவிதைச் சாரல்









 “ம்”

என்றொரு

உரையாடலை முடித்திருந்தேன்

மீண்டும் தொடர்வதெப்படி

தவித்திருந்தேன்



-:0:- -:0:--:0:-


“சரி”

என்ற சொல்லோடு

முடிந்துவிட்டது

உரையாடல்


மீண்டும் 

துவக்க முடியா

மௌனத்தின்

ஆழத்தில்

மூழ்கிக்கொண்டிருந்தது

உயிர்


-:0:- -:0:--:0:-


காதலில்

கவிதை பொய்மை என்பேன்

அவனை கண்ட நாள் 

நானே கவிதையானேன்


-:0:- -:0:--:0:-


பிழைகளால்

நிரம்பி வழிகிறது

உன் படைப்புகள்

என்றார்கள்


நானே படைப்பாற்றலின்

பிழை என்றேன்

அவர்களிடம்


-:0:- -:0:--:0:-


அவன் கற்பனையா

கனவா என்றாள்

கற்பனை என்றேன்

என் கண்கள் மூடிக்கொள்ளும் பொழுதெல்லாம்

என்னுடன் இருந்தான்

அவன்


-:0:- -:0:--:0:-


குதூகலத்தின்

மறுகோடியை அடைய

உன் ஒற்றை

புன்னகை போதுமானதாக

இருந்தது


-:0:- -:0:--:0:-


சீக்கிரம் இணங்கிவிடாதே

நீ 

எத்தனைக்கும் அதிக

காதலின் ஆழமென

உணர்ந்து பார்க்கட்டும்

இவளின் உயிர்

No comments:

Post a Comment

எழுதுகிறேன் ஒரு கடிதம்.

  கடிதப் போட்டியில் இரண்டாம் பரிசு பெற்றதென செல்லம் கொஞ்ச முடியவில்லை இந்த கடிதத்திடம்.. ஏன் என்று பிறகு சொல்கிறேன்... --------------------...