Sunday, 14 April 2024

குறுஞ்செய்தி

 





இருள் பழகிய பின்

மென் வெளிச்சம் கண்டது

கண்கள்


புற்களின் பச்சையும்

சிமெண்ட் தரையும்

தொடுத்து வைத்த

கதம்பமாக


கட்டி முடிக்கா

கட்டடம் சூர்ப்பனகையாகி

நின்றாள்


சூர்ப்பனகைக்குள்

பெண்மை உணரா

இராமன் நினைவை 

கலைத்தான்


தூரத்தில் விழித்து

விளையாடிய

விண்மீனை எட்டிப்

பிடிக்க ஆசை

வந்தது


நெருக்கத்தில்

கருப்பழகியாய்

வேப்பமரம்

மென் நடம் புரிந்தாள்


பக்கத்து பாய் வீட்டு

சன்னலில் 

வெளிச்சம் கசிந்தது


நோன்பு கஞ்சி

நாக்கில் ருசி தட்டி

பேரிழப்பாக கதை

பேசியது


எங்கோ சிரிப்பொலிகள்

சிரிக்கிறது

நாய்கள்

குரைக்கிறது


நான் இல்லாமல்

போய்

மென் ஒளியாகிக் கொண்டிருந்த

சமயம்


அந்த குறுஞ்செய்தி

மனுஷியாக

மீட்டெடுத்தது.

No comments:

Post a Comment

எழுதுகிறேன் ஒரு கடிதம்.

  கடிதப் போட்டியில் இரண்டாம் பரிசு பெற்றதென செல்லம் கொஞ்ச முடியவில்லை இந்த கடிதத்திடம்.. ஏன் என்று பிறகு சொல்கிறேன்... --------------------...