காதல் என்றாலே
மறைத்தலும் ஒட்டிக்கொள்கிறது
உள்ளத்தில்...
எல்லா காதலும்
ஆழத்தில் வலி
இழப்பில்
உயிர் கொல்லும் வலி
காதலை விட
நட்பு தான்
என்னை கொன்று குவித்தது
எங்கிலும்
காதல் கைவரவே
இல்லையே...
எப்பொழுது வருவாய் நீ..
உனக்கு எத்தனை காதல்களும்
இருக்கட்டும்
உன் கடைசி காதலியாக
நான் இருந்தால் போதும்..
அடுத்தொன்று தேடி
நீ எனை பிரிந்து போவதை தாங்க
எனக்குள் ஆற்றல் இல்லை
இப்பொழுதெல்லாம்
என் வாழ்தலுக்கே
நீ தான் ஆற்றலாகிறாய்...
நீயே இல்லாது போனால்?
No comments:
Post a Comment