Monday, 15 April 2024

காதல் என்பது

 




காதல் கள் தான்

சடுதியில்

மயக்கத்தில் ஆழ்த்தியது


சிந்திக்க விடாமல்

மனதை அழுத்தியது

பெருந்துயர் வந்து 

ஆட்கொண்டு


பேசாதே போவாயோவென

பயமுறுத்தியது

இத்தனை 

பயமுறுத்தல்களும்

உன்னிடத்தில் இருந்து வந்த

அந்த

Hi - யில் முடிவடைந்தது...


பயத்தை புறந்தள்ளி

மீண்டும் காதலிக்கத் துவங்கிவிட்டேன்

காதலின் வலி உணர்ந்தவன்

இன்னொருத்தியை வலிக்கச் செய்வாயா?

என்ன!


ஒருவேளை

உன் காதல் என் மீது

அபிஷேகிக்கப்படாமல்

போனாலும் கூட


நான் காதலிக்கிறேன்

உன்னை...

என்னுள் இது எத்தனையாவது என்று

தெரியவில்லை...


முன்பெப்போதும்

நெஞ்சுக்கூடு 

சிதறிப்போவதான உணர்வு

ஏற்பட்டதே இல்லை..


வலி

நிராகரிப்பு

பிரிதல்

ப்ளாக் செய்தல்

எல்லாம் வழமை தான்...


இன்றுணர்ந்த வலி

புதிதாகவே

பூத்த மலர் இன்று....

No comments:

Post a Comment

எழுதுகிறேன் ஒரு கடிதம்.

  கடிதப் போட்டியில் இரண்டாம் பரிசு பெற்றதென செல்லம் கொஞ்ச முடியவில்லை இந்த கடிதத்திடம்.. ஏன் என்று பிறகு சொல்கிறேன்... --------------------...