கடிதப் போட்டியில் இரண்டாம் பரிசு பெற்றதென செல்லம் கொஞ்ச முடியவில்லை இந்த கடிதத்திடம்.. ஏன் என்று பிறகு சொல்கிறேன்...
(எத்தனை யுகங்கள் கடந்திருக்கும் இந்த காதலின் தொடர் பயணம்) இது என்னவனுக்ககாக நான் எழுதியவைகள். அது உங்களுக்கானதாக தோன்றினாலும், அது உங்களுக்கானது அல்ல. (வாசியுங்கள்...கடந்து போங்கள் உங்கள் காதல் உங்களுடையவர்களுக்கானது மட்டுமே.) எப்போதும் காதலித்துக்கொண்டே இருப்பேன். என்னை என் காதலை.. எங்களுடையது என்று கூற என்னுடன் யாருமுில்லை. எப்போதும் இருந்ததில்லை. இனி யாரேனும் வருவார்களா என்பதும் தெரியவில்லை.
கடிதப் போட்டியில் இரண்டாம் பரிசு பெற்றதென செல்லம் கொஞ்ச முடியவில்லை இந்த கடிதத்திடம்.. ஏன் என்று பிறகு சொல்கிறேன்...
என்னை அழைத்துக்கொண்டு போ
ஒரு தூரதேசம்
இந்த கவலைகள் எதுவும்
என்னை தீண்டாமல்
அடைக்காத்துக்கொள்
இந்த துயர்
தாங்கொண்ணா வலியை கொடுக்கிறது
சுற்றிலும் சூழ்ந்திருக்கும் வலை
தகர்த்து எறிய கூடாததாக
வா...
வந்துவிடு
நான் மரணிக்கும் முன்பாவது...
காத்திருக்கிறேன் நித்தமும் உனக்காக.
அன்புள்ள உனக்கு...
நான் உன்னை காதலிக்கிறேன். இதை உன்னிடத்தில் சொல்ல வெட்கப்படுகிறேன். ஒவ்வொரு முறை நிராகரிப்பிலும்... அய்யோ இது காதலில்லையே என உணர்ந்து அழுதிருக்கிறேன். இன்னும் கவனமாக இருக்க வேண்டும் என்று எனக்குள் சுருங்கியிருக்கிறேன்.
இன்று
காதலை சந்தித்துவிட்டேனே என்று அழுது நின்றேன். ஒரு சிறுமி என்னை கேலி செய்யும் அளவிற்கு. நான் அழுதிருக்கிறேன்.
என்ன செய்ய!
நான் வாங்கி வந்த வரம் அப்படி... இதை உன்னிடம் சொல்ல முடியாது. ஒரு வேளை நான் சொல்லி நீ ஏற்காதே போகும் இன்னொரு வலியை தாங்க எனக்கு திறன் இல்லை.
என்றும் உன் நினைவாக...
உன்னவள்
காதல் கள் தான்
சடுதியில்
மயக்கத்தில் ஆழ்த்தியது
சிந்திக்க விடாமல்
மனதை அழுத்தியது
பெருந்துயர் வந்து
ஆட்கொண்டு
பேசாதே போவாயோவென
பயமுறுத்தியது
இத்தனை
பயமுறுத்தல்களும்
உன்னிடத்தில் இருந்து வந்த
அந்த
Hi - யில் முடிவடைந்தது...
பயத்தை புறந்தள்ளி
மீண்டும் காதலிக்கத் துவங்கிவிட்டேன்
காதலின் வலி உணர்ந்தவன்
இன்னொருத்தியை வலிக்கச் செய்வாயா?
என்ன!
ஒருவேளை
உன் காதல் என் மீது
அபிஷேகிக்கப்படாமல்
போனாலும் கூட
நான் காதலிக்கிறேன்
உன்னை...
என்னுள் இது எத்தனையாவது என்று
தெரியவில்லை...
முன்பெப்போதும்
நெஞ்சுக்கூடு
சிதறிப்போவதான உணர்வு
ஏற்பட்டதே இல்லை..
வலி
நிராகரிப்பு
பிரிதல்
ப்ளாக் செய்தல்
எல்லாம் வழமை தான்...
இன்றுணர்ந்த வலி
புதிதாகவே
பூத்த மலர் இன்று....
காதல் என்றாலே
மறைத்தலும் ஒட்டிக்கொள்கிறது
உள்ளத்தில்...
எல்லா காதலும்
ஆழத்தில் வலி
இழப்பில்
உயிர் கொல்லும் வலி
காதலை விட
நட்பு தான்
என்னை கொன்று குவித்தது
எங்கிலும்
காதல் கைவரவே
இல்லையே...
எப்பொழுது வருவாய் நீ..
உனக்கு எத்தனை காதல்களும்
இருக்கட்டும்
உன் கடைசி காதலியாக
நான் இருந்தால் போதும்..
அடுத்தொன்று தேடி
நீ எனை பிரிந்து போவதை தாங்க
எனக்குள் ஆற்றல் இல்லை
இப்பொழுதெல்லாம்
என் வாழ்தலுக்கே
நீ தான் ஆற்றலாகிறாய்...
நீயே இல்லாது போனால்?
கடிதப் போட்டியில் இரண்டாம் பரிசு பெற்றதென செல்லம் கொஞ்ச முடியவில்லை இந்த கடிதத்திடம்.. ஏன் என்று பிறகு சொல்கிறேன்... --------------------...